பாத்தாலே தெரியுது...தோல்வி பயத்தில் மோடி

65பார்த்தது
பாத்தாலே தெரியுது...தோல்வி பயத்தில் மோடி
இந்தியாவில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த ஏப்.19 க்குப் பின் மோடி பேச்சில் வியக்கத்தக்க மாற்றம் வந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஏப். 19 வரை தனது பிரச்சாரங்களில் மோடி புறக்கணித்து வந்தார். ஏப்.19 க்குப் பின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தனது பிரச்சாரங்களில் மோடி பயன்படுத்துகிறார் என தெரிவித்திருக்கிறார்.