கண்ணிமைக்கும் நேரத்தில் போனை திருடிய நபர் (வீடியோ)

61பார்த்தது
மும்பை சர்ச்கேட் பகுதியில் வெளிநாட்டவர் ஒருவருக்கு எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது. அந்த நபர் ரயில் நிலையத்தில் செல்பி வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, ​​மின்சார ரயிலுக்குள் இருந்த நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் கையில் இருந்த போனை பறித்துச் சென்றார். ரயில் ஓடிக் கொண்டிருந்ததால், திருடனைப் பிடிக்க முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் போன்ற நபர்களால் வெளிநாட்டவர் நம் அனைவரையும் தவறாக நினைக்க கூடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி