"மோடி சுட்ட வடை" - வடை சுட்டு பிரச்சாரம் செய்த ஆ. ராசா

53பார்த்தது
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ. ராசா இன்று சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூர் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது டீக்கடை ஒன்றில் நுழைந்த அவர், இளைஞர்களின் வேலை இல்லா திண்டாட்டத்தை விளக்கும் விதமாக வடை சுட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை தருவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி, 10 ஆண்டுகளாக எந்த இளைஞருக்கும் வேலை தரவில்லை என்று திமுக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ஆ ராசா இன்று அதை மையப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி