ஜாதி பெயரால் திருவானைக்கால் தேர் இழுப்பதில் சிக்கல்

85பார்த்தது
ஜாதி பெயரால் திருவானைக்கால் தேர் இழுப்பதில் சிக்கல்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இருதரப்பு பிரச்சனையால் சுவாமி தேர் தெற்கு வீதியிலும், அம்பாள் தேர் வடக்கு வீதியிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் சாதிப் பெயருடன் டீ சர்ட் அணிந்ததற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவானைக்காவல் தேர் 12 மணிக்கு நிலைக்கு வர வேண்டிய சூழலில் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் நிலைக்கு வந்தால் மட்டுமே திருவானைக்காவல் பகுதியில் மின் வினியோகம் தரப்படும் என்ற நிலை உள்ளது.

தொடர்புடைய செய்தி