அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, எம்எல்ஏ தனது மனைவிக்கு சீட் கொடுக்காததால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்போய்ச்சா தொகுதியின் எம்எல்ஏவான பாரத் சந்திர நாரா, தனது மனைவிக்கு மக்களவைச் சீட்டு மறுக்கப்பட்ட உடனேயே தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இவரது மனைவி ராணி நாரா கடந்த காலங்களில் மத்திய அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.