ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களை பயன்படுத்துவேன்

81பார்த்தது
ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களை பயன்படுத்துவேன்
வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், எனது கடந்த காலப்பணிகளை வைத்து மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கச் செய்வார்கள். தி.மு.க-வினர் தங்களின் தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் செய்யவில்லை. மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை அடையாளம் காட்டியவர், ஜெயலலிதா. அதனால் தேர்தல் பிரசாரத்தின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் படங்களை பயன்படுத்துவேன் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி