பானை சின்னத்திற்கு அமைச்சர் வாக்கு சேகரிப்பு

82பார்த்தது
பானை சின்னத்திற்கு அமைச்சர் வாக்கு சேகரிப்பு
திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். ராயநல்லூர், உத்தமசோழகன், கந்தகுமரன் சந்திப்பு, நெடுஞ்சேரி கடைவீதி, விளாகம் கடைவீதி, அய்யனூர் மூன்று ரோடு, பண்ணப்பட்டு சந்திப்பு ஆகிய பகுதிகளில் இன்று பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அதே போல், கீழ் அடூர் மெயின் ரோடு, கண்ணங்குடி, கீழ் நத்தம் ஆகிய பகுதிகளிலும் இன்று திறந்த வாகனத்தில் சென்று பரப்புரை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி