பூனையை மீட்க கிணற்றுக்குள் இறங்கிய 5 பேர் உயிரிழப்பு

55778பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் வாட்கி கிராமத்தில், ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோ கேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றுவதற்காக இறங்கிய ஐந்து பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6வது நபர் மட்டும் உயிர் பிழைத்தார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி