பெண்கள் வீட்டை எட்டிப் பார்த்த இளைஞர்.. அடித்து கொலை..

84பார்த்தது
பெண்கள் வீட்டை எட்டிப் பார்த்த இளைஞர்.. அடித்து கொலை..
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் இளம்பெண்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அந்த வீட்டின் ஜன்னல் வழியே பரசுராமன் (28) என்ற இளைஞர் எட்டிப்பார்த்திருக்கிறார். அவரை திருடன் என நினைத்த அப்பகுதி மக்கள், அவரை கொடூரமாக தாக்கினர். இதில், அந்த இளைஞர் மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரை தாக்கிய 7 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி