கோயிலில் உள்ளாடையுடன் போலீஸ்: அதிர்ச்சி வீடியோ

14091பார்த்தது
உ.பி., உன்னாவ் கொலுஹகடா கிராமத்தில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் பகவத் கீதை கதாகாலட்சேபம் நிகழ்ச்சி நேற்று (மே 26) நடைபெற்றது. அப்போது ராம் நிவாஸ் யாதவ் என்ற காவலர், உள்ளாடை மட்டும் அணிந்து சேரில் அமர்ந்து மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை வீடியோவாக எடுத்து சிலர் இணையத்தில் பதிவிட்டனர். வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளிக்கச் சென்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததாலும், தண்ணீர் இல்லாததாலும் உள்ளாடையுடன் அமர நேரிட்டதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி