நெல்லை to சென்னை: சிறப்பு ரயில் அறிவிப்பு

58பார்த்தது
நெல்லை to சென்னை: சிறப்பு ரயில் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றிருந்தனர். தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளை கருத்தில் கொண்டு இன்று(ஏப்.21) இரவு 10:45 மணிக்கு நெல்லையிலிருந்து எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, மதுரை, திருச்சி வழியாக நாளை காலை 10:15 மணிக்கு எழும்பூர் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி