உசிலம்பட்டி அருகே உள்ள பேரையூா் துள்ளுக்குட்டி நாயக்கனூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜாசங்கா் (49). இவருக்கும், இதே ஊரை சோ்ந்த பரமன் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், ராஜா சங்கா் தனது சகோதரி வீட்டு விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது அங்கு வந்த பரமன் தரப்பினா் ராஜா சங்கரிடம் தகராறில் ஈடுபட்டு அவரையும், அவரது உறவினா்களையும் தாக்கினா். இதையடுத்து, அங்கு திரண்ட ராஜாசங்கா் உறவினா்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இரு தரப்பினரும் ஆயுதங்களுடன் மோதி கொண்டதில், ராஜாசங்கர் , பரமன் உறவினர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதையடுத்து ராஜாசங்கா் அளித்த புகாரின் பேரில் பரமன், வீரபாண்டி, சின்னான், சூரன் உள்பட 10 போ் மீதும், மற்றொரு தரப்பில் பரமன் அளித்தப் புகாரின்பேரில், ராஜாசங்கா், இவரது உறவினா்கள் 13 போ் மீதும் போலீஸாா் வழக்கு பதிந்தனா். மேலும் பரமன் தரப்பில் சூரன் (52), முருகன் (27) ஆகியோரையும் ராஜாசங்கா் தரப்பைச் சோ்ந்த அய்யனாா் (33), விஜயகுமாா் (32), சதீஷ்குமாா் (19), காஸ்ட்ரோ, நிருபன் சக்கரவா்த்தி (25), சுபாஷ் (27), சசிக்குமாா்(35), சங்கிலி (30), செல்வம் (55), அய்யங்காளை(56), ஆண்டி மகன் செல்வம் உள்பட 13 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.