பரோலில் வந்த கைதி தப்பியோட்டம்.

52பார்த்தது
பரோலில் வந்த கைதி தப்பியோட்டம்.
மதுரையில் கஞ்சா வழக்கில் பரோலில் வந்த வாலிபர் தப்பி ஓட்டம். போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை வலையங்குளத்தை அடுத்துள்ள பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி என்பவரின் மகன் காளி (எ) கலாம் காளி ( 24) இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி பரோலில்
வலையங்குளம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று (செப். 7) பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் காளி காலையிலிருந்து தலைமறைவானார். இதனையடுத்து பெருங்குடி போலீஸார் தலைமறைவான குற்றவாளி கலாம் காளியை தேடி வருகின்றனர்.

பரோலில் (பிணையில்) வெளிவந்த குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

பரோல் குற்றவாளி தப்பிய சம்பவம் வலையன்குளம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி