கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்

1073பார்த்தது
திருமங்கலம்: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே. சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவை சேர்ந்த தனியார் கெமிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது

இந்த நிலையில் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து சுத்திகரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் 6 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மேலும் இறைச்சி கழிவுகளிலிருந்து வெளியேறக்கூடிய கழிவு நீரால் மண்வளம் மற்றும் நீர்வளம் பாதிக்கப்படுவதாகவும் எனவே அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கே. சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணிக்கு திடீரென கள்ளிக்குடி - காரியாபட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கும் வரை சாலை மறியலில் கைவிடப்போவதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது அந்த நிறுவனத்தை மூடி சீல் வைக்கவில்லை என்றால் நாங்கள் யாரும் ஓட்டு போட போவதில்லை என்று தேர்தலை புறக்கணித்துள்ளனர் அதனால் தற்போது திருமங்கலம் டிஎஸ்பி, வருவாய் கோட்டாட்சியர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி