திருமங்கலம்: மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்தங்களை திரும்ப பெறக் கோரி திருமங்கலம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நேற்று ஊர்வலம் நடைபெற்றது.
வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் புதிய சட்டங்கள் திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டபடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.