அடாது மழையிலும் விடாது பணி செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்

1879பார்த்தது
மதுரை நகரில் பரவலாக மழை பெய்தது. இம்மழை பெய்ய தொடங்கியதும் தெற்கு வாசல் சிக்னல் பகுதியில் மின்சாரம் தடை ஏற்பட்டது. இதனால் சிக்னல்கள் வேலை செய்ய வாய்ப்பில்லை என்பதால் உடனே மழையை பொருட்படுத்தாமல் தெற்கு வாசல் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி அவர்கள் சந்திப்பின் நடுவே நின்று போக்குவரத்தை ஓழுங்குபடுத்தி வந்தார்.

அடாது மழை பெய்தாலும் விடாது எங்கள் பணியை செய்வோம் என்று கூறுவது போல காவலரின் பணி இருந்தது. சுமார் கால்மணி நேரத்திற்கும் மேலாக மழையும் நிற்கவில்லை, ஆனால் மின்சாரம் வந்துவிட்டது. மழையில் நனைந்தபடி பணி செய்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் பாராட்டி சென்றனர்.

இம்மழை நேரம் செல்ல செல்ல வலுவாக பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்புடைய செய்தி