அசாம் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்

73பார்த்தது
அசாம் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்
அசாம் மோரிகான் சிறையில் விசாரணை கைதிகளான சைபுதீன், ஜியாருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் ஆகியோர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் நேற்று (அக்.11) அதிகாலை 1 மணியளவில் சினிமா பாணியில் பெட்ஷீட், போர்வை, லுங்கி ஆகியவற்றை கயிறாக திரித்து 20 அடி உயர சுவரில் ஏறி தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து, மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், பிரசாந்தா சைகியா என்ற ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி