14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

72பார்த்தது
14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை
தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (அக்., 12) காலை 10 மணிக்குள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கரூர், திருச்சி, ராமநாதபுரம், தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி