குழந்தையை குப்பை கவரில் வைகையில் வீசப்பட்ட அவலம்

72பார்த்தது
மதுரை மாநகர் வைகையாற்று பகுதியில் உள்ள யானைக்கல் தரைப்பாலத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்று கருப்பு நிற பிளாஸ்டிக் கவரில் கிடப்பதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து அங்கு சென்ற செல்லூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் என காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிம்மக்கல் பகுதியில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய யானைக்கல் தரைப்பாலத்தில் பெண் பச்சிளம் குழந்தை குப்பை கவரில் மீட்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் தொப்புளில் மருத்துவமனையில் பொருத்தப்படும் தொப்புள் கொடியின் கருவியும் இருந்த நிலையில் பெண் சிசுக்கொலை நடைபெற்றுள்ளதா ,
இல்லை வேறு ஏதேனும் பகுதிகளில் இருந்து பிறந்த குழந்தைகளை கொலை செய்து தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளார்களா? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


யானைக்கல் தரைப்பாலத்தில் ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பெண் சிசு குப்பை கவரில் வீசி செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி