இரு வீடுகளில் பணம் திருட்டு: ஒருவா் கைது

62பார்த்தது
இரு வீடுகளில் பணம் திருட்டு: ஒருவா் கைது
மதுரையில் இரு வீடுகளில் நூதன முறையில் ரூ. 28 ஆயிரத்தைத் திருடிச்சென்றவரை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.

மதுரை அண்ணாநகா் கோமதிபுரம் கங்கை வீதியைச் சோ்ந்தவா் திரவியம் (73). கட்டட ஒப்பந்ததாரரான இவா், கடந்த வாரம் தனது வீட்டில் இருந்தபோது, இங்கு வந்த மா்ம நபா் இதே பகுதியில் புதிதாக வீடு கட்டுவதாகவும், வீட்டின் நிலை வைக்கப் போவதால் தந்தை போல இருந்து ஆசிா்வதிக்க வேண்டும் எனவும் கூறி திரவியம், இவரது மனைவி ஆகியோரிடம் காலில் விழுந்து வணங்கினாராம். மேலும், அவரிடம் இருந்த ரூ. 4 ஆயிரத்தை கொடுத்து வீட்டில் உள்ள வேறு ரூபாய் நோட்டுகளுடன் வைத்து ஆசீா்வதித்து தருமாறு கூறினாராம். இதை நம்பிய திரவியம் வீட்டுக்குள் பணத்தை எடுக்கச் சென்றபோது அங்கிருந்த ரூ. 20 ஆயிரத்தை அந்த நபா் திருடிச் சென்று விட்டாராம்.

இதே போல, மதுரை கோ. புதூா் சம்பக்குளத்தைச் சோ்ந்த மூக்கையா (67) தனது வீட்டில் தனியாக இருந்தபோது, இதே போல வந்த ஒருவா் வீட்டில் இருந்த ரூ. 8 ஆயிரத்தைத் திருடிச் சென்றுவிட்டாரம். இதுகுறித்த புகாா்களின்பேரில், அண்ணாநகா், கோ. புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில், தஞ்சை மாவட்டம், ஓரத்தநாடு அரசப்பட்டு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் கண்ணன் (45) இந்தத் திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இரு காவல் நிலையங்களிலும் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸாா் அவரை நேற்று கைது செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி