மதுரை வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக இன்று (மே 16) வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் மதுரை மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளிப்பதற்காகவும் ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு 326 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.