திமுக அரசைக் கண்டித்து, துண்டு பிரசுரம் விநியோகம்

75பார்த்தது
திமுக அரசைக் கண்டித்து, துண்டு பிரசுரம் விநியோகம்
மதுரை மாவட்டம்,
சோழவந்தானில் திமுக அரசைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர்
ஆர். பி. உதயகுமார் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தை, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத, திமுக அரசைக் கண்டித்தும், போதை பொருட்களின் கூடாரமாக மாறிவரும் தமிழக அரசை கண்டித்தும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் தலைமையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு
ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னால் எம். எல். ஏ. க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், தவசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தமிழகம் போதை பொருட்களின் கூடாரமாகவும் இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்க முடியாத கையாலாகாத அரசாங்கமாக திமுக செயல்பட்டு வருகிறது. ஆகையால், மக்கள் திமுக அரசு மீது உச்சகட்ட வெறுப்பில் உள்ளனர். தேர்தல் எப்போது வந்தாலும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும்
அதிமுக ஆட்சி அமைக்கும். அதற்கு, மக்கள் தயாராகி
விட்டனர் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி