நைஜீரியாவில் பள்ளி ஒன்றில் இருந்து சுமார் 287 மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. அவர்களை விடுவிக்க குண்டர்கள் பணம் கேட்டனர். தெரியாத எண்ணிலிருந்து குண்டர்கள் அழைத்தனர். ஒரு பில்லியன் நைரா (ரூ. 5.15 கோடி) தருமாறு கோரினர். 20 நாட்களுக்குள் தொகையை செலுத்த வேண்டும். அரசிடம் இருந்து பதில் வரவில்லை என்றால் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டினர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.