குவைத் தீ விபத்து- பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு!

77பார்த்தது
குவைத் தீ விபத்து- பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு!
குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கிய பலர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும், இந்த தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து வருவதாக குவைத் நாட்டின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி