போச்சம்பள்ளி அருகே 10 ஏக்கர் வாழை வெயிலில் காய்ந்து சேதம்

555பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சைதாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 10 ஏக்கருக்கும் மேல் வாழை பயிரிட்டிருந்தனர். கடந்த ஒரு வருடமாக பராமரித்து வந்த நிலையில், வாழை பலன் தரும் சமயத்தில் அதிகப்படியான வெயில், வறட்சி காரணமாக குலை தள்ளிய நிலையில் ,அனைத்து வாழை மரங்களும் காய்ந்து சேதமானது. கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், வாழை மரத்தை காப்பாற்ற முடியாமல் கண்முன்னே காய்ந்து வருவதை கண்டு வேதனையில் உள்ளனர். தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவி வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி