1 ஆம் வகுப்பு மாணவர்களை பூமாலை அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள்

82பார்த்தது
தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். அதேபோல ஒன்றாம் வகுப்பு சேர்க்கையும் நடைபெற்று மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். அந்த வகையில் ஓசூர் தேர்ப்பேட்டை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக 90 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுன் துரை, வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி ராஜு, பார்வதி நாகராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தலைவர் விமலா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு பூமாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.

அப்போது மாணவர்கள் மகிழ்வுடன் இனிப்புகளை உண்டு பள்ளிக்கு சென்றனர். முன்னதாக பூமாலை அணிவித்த மாணவர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பள்ளிக்கு சென்றனர். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி