ஒசூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ஆய்வு

52பார்த்தது
ஒசூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ஆய்வு
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் தமிழ் பள்ளி, தெலுங்கு பள்ளி மற்றும் உருது பள்ளியினை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாற்றினார். பள்ளி ஆசிரியர்களுடன் பள்ளி மேம்பாட்டிற்கு கலந்துரையாடலை மேற்கொண்டார். மேலும் மாதிரி வகுப்புகளை பள்ளியில் உயர்த்திட கேட்டுக் கொண்டார். பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளை ஓசூர் மாநகராட்சி முதல் மேயர் திரு எஸ் ஏ சத்யா அவர்கள் ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி பொறியாளர் ராஜாராம் உதவி பொறியாளர் வெங்கட்ராமன் மாமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி நரேஷ், மோசின் தாஜ் நிசார், நாகராஜ், பகுதி செயலாளர் ராமு, மற்றும் கழக நிர்வாகிகள் குமார், ஹரி பிரசாத், மஞ்சுநாத், மணி, செல்வம், சங்கர், ராமு, சாமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனார்.

தொடர்புடைய செய்தி