கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீசார் கருக்கன்கொட்டாய் பகுதியில் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர் சென்றனர். அப்போது அங்குள்ள மாதவன் என்பவரது விவசாய நிலத்தில், பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியக்கொண்டிருந்த பெத்தனப்பள்ளி தமிழரசன்(30) முருகன் (38) எம். சி. பள்ளி அருள் (35) கருக்கன்கொட்டாய் காவேரி (32) சுப்பிர மணி(40) ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.