ஒரே நாளில் உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

72பார்த்தது
ஒரே நாளில் உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை கர்நாடக அரசு அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 72,731 கனஅடியாக இருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 82 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 84 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 43.978 டிஎம்சியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி