பணம் கொடுக்க மறுத்த நபர் கடத்தல்.. சிக்கிய கும்பல்

64பார்த்தது
பணம் கொடுக்க மறுத்த நபர் கடத்தல்.. சிக்கிய கும்பல்
சேலம் மேட்டூரைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் நடத்திய நிதி நிறுவனத்தில் ஆசிரியை பாரதி ரூ.22 லட்சம் வரை முதலீடு செய்திருக்கிறார். இந்நிலையில், ஆசிரியர் தனது பணத்தைத் திருப்பிக் கேட்டதாக தெரிகிறது. ஆனால், மேகநாதன் பணத்தை தர மறுத்துள்ளார். இதனால், 7 பேர் கொண்ட கும்பல் மேகநாதனை தாக்கி காரில் கடத்திச் சென்றது. இதனையறிந்த போலீசார், அந்த காரை விரட்டிச் சென்று மேகநாதனை மீட்டனர். முரளி என்பவர் மட்டும் சிக்கிய நிலையில் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி