சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது

57பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் விஆர்ஓ காலனியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து மனைவி இராமாயி (50). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மது விற்ற ராமாயி மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி