கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சின்னரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி மலர்க்கொடி (39). இவர் அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மது விற்ற மலர்க்கொடி மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர் மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.