வெங்கமேடு அருகே மது போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு, சின்ன குளத்து பாளையம் அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் வயது 41.
அண்மைக்காலமாகவே இவர் அதிகப்படியான மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 4 மணி அளவில், மது போதையில் இருந்த அரவிந்தன், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த அவரது மனைவி ரம்யா வயது 33 என்பவர், தனது கணவனை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா, மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த அரவிந்தன் உடலை மீட்டு அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.