கந்தசாரப்பட்டியில் டூவீலர் - சரக்கு வேன் மோதி விபத்து.

50பார்த்தது
கந்தசாரப்பட்டியில் டூவீலர் சரக்கு வேன் மோதி விபத்து.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, சுங்ககேட், காவேரி நகரை சேர்ந்தவர் ரங்கசாமி வயது 60.


இவர் மார்ச் 4ஆம் தேதி இரவு 7: 15 மணியளவில், கொரவபட்டி- கந்தசாரப்பட்டி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார்.

இவரது வாகனம் கந்தசாரப்பட்டி அருகே சென்றபோது,


எதிர் திசையில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, லந்தகோட்டை அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், ரங்கசாமி ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் தொடர்பாக ரங்கசாமியின் மகன் ராஜேஷ் குமார் வயது 28 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கருப்பண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி