கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சங்கரன் மலை பட்டியைச் சேர்ந்தவர்கள் வரதராஜ் மற்றும் செல்வராஜ் இவர்களுக்கு இடையே பொது பாதையில் சோளத்தட்டை வைப்பது சம்பந்தமாக கடந்த 14ஆம் தேதி பிரச்சனை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மர கலத்தடியால் தாக்கிக் கொண்டுள்ளனர். காயம் பட்ட இருவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இருதரப்பிலும் அளித்த புகாரின் பேரில் செல்வராஜ், கனகலட்சுமி, வரதராஜ் ஆகிய 3 பேர் மீது மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.