கர்நாடகாவின் சாமராஜ்நகரில் உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் 56 வயதான பேக்கரி ஊழியர் வேணுகோபால் இனிப்பை பார்சல் செய்த போது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.