ரயில்வே தண்டவாளத்தில் உடைப்பு, ரயில் தடுத்து நிறுத்தம்

83பார்த்தது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒரு வழி ரயில் பாதையில் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது.

இந்நிலையில் அதன் அருகே குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் காலைக்கடன் கழிப்பதற்காக அந்த பகுதிக்கு சென்ற நிலையில் உடைப்பு ஏற்பட்டதை பார்த்துள்ளார். உடனடியாக இருப்பு பாதை சரி பார்க்கும் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வந்து பார்த்து உடைப்பு ஏற்பட்டதை அறிந்து ரயில் சென்றால் விபத்து ஏற்படும் என தெரிந்து கொண்டனர்.

அந்த நேரத்தில் எர்ணாகுளம் முதல் காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்துள்ளது. உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் சிவப்பு கொடியை அசைத்து விரைவு ரயிலை நிறுத்தியுள்ளனர். உடைப்பு ஏற்பட்ட அருகே 100 மீட்டர் தூரத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து வாஸ்கோ முதல் வேளாங்கண்ணி, ஈரோடு டு திருச்சி உள்ளிட்ட விரைவு ரயில் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் ஒரு மணி நேரம் காலதாமதத்துடன் சென்று கொண்டிருக்கிறது.

உடைப்பு ஏற்பட்ட தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி