கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கழுத்தரிக்காம்பட்டியை சேர்ந்தவர் வைரப் பெருமாள் மகள் புனிதா (19). இவர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தவர் அதிகாலை 5 மணிக்கு பார்த்த போது புனிதா காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரின் தாயார் மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் நேற்று (பிப்ரவரி 20) வழக்கு பதிவு செய்தனர்.