டூவீலரை முந்தி சென்றதால் பின்னால் வந்த டூவீலர் மோதிவிபத்து.

63பார்த்தது
டூவீலரை முந்தி சென்றதால் பின்னால் வந்த டூவீலர் மோதிவிபத்து.
டூவீலரை முந்தி சென்று திடீரென சிக்னல் வெளிப்படுத்தாமல் வலது புறம் திருப்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, மலைக்கோவிலூர் அருகே உள்ள ஜனதா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுவாமிநாதன் வயது 47.

இதேபோல, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருக்காம்புலியூர், செல்வம் நகரை சேர்ந்தவர் ரவி மகன் விக்னேஷ் வயது 17.


இவர்கள் இருவரும் ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 5: 30- மணி அளவில், திருச்சி- கரூர் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களது டூவீலர் மாயனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது,
கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருக்காம்புலியூர், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நிதிஷ் வயது 21 என்பவர், மற்றொரு டூவீலரில் வேகமாக சென்று, சாமிநாதன் ஓட்டிச் சென்ற டூவீலருக்கு முன்பாக சென்று, திடீரென தனது வாகனத்தை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், வலது புறம் திருப்பியதால், சாமிநாதன் ஓட்டிய டூ வீலர் நிதிஷ் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

உடனடியாக இவர்களை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், சாமிநாதனை சேலம் அரசு மருத்துவமனையிலும்,
விக்னேஷ் & நிதிஷ் ஆகியோரை திருச்சி கே எம் சி மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.

சாமிநாதனின் மனைவி விஜயா அளித்த புகாரில், நிதிஷ் மீது வழக்கு பதிவு செய்தனர் மாயனூர் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி