நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.

69பார்த்தது
சாலையில் நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாபேட்டை,
மேலவிட்டு கோட்டை அருகே உள்ள பாஞ்சாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விட்டல் பாய் வயது 65.

இவர் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7 மணி அளவில், சிந்தலவாடியில் இருந்து லாலாபேட்டை செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.



அப்பகுதியில் உள்ள சந்தைப்பேட்டை சங்கர் கம்ப்யூட்டர்ஸ் கடை அருகே நடந்த சென்றபோது, அதே சாலையில், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி அருகே உள்ள மகளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற விட்டால் பாய் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்த சம்பவம் குறித்து விட்டால் பாய் உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் வயது 56 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தங்கதுரை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி