108 பெண் தொழிலாளர்களுக்கு உதவிகரம் நீட்டிய சக ஊழியர்

572பார்த்தது
கரூர் மாவட்டத்தில் இயங்கும் 38 அவசர உறுதி ஆம்புலன்சில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு கோடை வெப்பத்தில் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, உடன் பணியாற்றும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் ராமன் ஏற்பாட்டில், குடை தண்ணீர், பாட்டில், கைப்பை ஆகியவை காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் இயங்கும் 108 அவசர ஊர்தியில் பணியாற்றும் 30 பெண் தொழிலாளர்களுக்கு, கோடை வெப்பத்திலிருந்து காக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளைக்கு நாள் அதிகரித்து வருவதால், அதிகளவிலான குடிநீர் மற்றும் நீர் சத்துள்ள பொருட்களை அறிந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி