டெல்லி காங்கிரஸ் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமனம்

81பார்த்தது
டெல்லி காங்கிரஸ் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமனம்
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்ததையடுத்து, உயர்நிலைக் குழு புதிய இடைக்கால தலைவரை நியமித்துள்ளது. தேவேந்தர் யாதவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ள அவர் கூடுதலாக டெல்லி மாநில பொறுப்பு இடைக்கால தலைவராக செயல்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியுடனான, காங்கிரஸின் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி