சந்தேகத்தினால் பெண்ணை கத்தியால் குத்திய இருவர் கைது.

3229பார்த்தது
சந்தேகத்தினால் பெண்ணை கத்தியால் குத்திய இருவர் கைது.
கரூர் மாநகராட்சி காலனியில் வசித்து வருபவர் சண்முகம் மனைவி மணிமேகலை வயது 40. இவர் கரூர் மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இவரது சகோதரி, கௌரி வயது 38 இதே பகுதியில் வசித்து வருபவர்கள் விஜயபாஸ்கர் வயது 38. இவரது சகோதரர் பாலகிருஷ்ணன் வயது 31.

ஏப்ரல் 1ம் தேதி அன்று, விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு, பொது பாதையில் அமைக்கப்பட்டு இருந்த 10 &10 அளவுள்ள செட்டை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி விட்டது. இந்த விஷயத்தில், மணிமேகலை அளித்த தகவலின் பேரில்தான், மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுத்தது என சந்தேகம் அடைந்த விஜயபாஸ்கர், மணிமேகலை வீட்டுக்கு வந்த விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணன் மணிமேகலையை தகாத வார்த்தை பேசி, கத்தியால் குத்தி மிரட்டல் விடுத்தனர்.

இந்த சம்பவத்தில் மணிமேகலை, கௌரி இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மணிமேகலை அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட கரூர் காவல் துறையினர், விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணன் இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி