திருமணத்தை மறைத்து வாலிபரை ஏமாற்றிய இளம்பெண்

82பார்த்தது
திருமணத்தை மறைத்து வாலிபரை ஏமாற்றிய இளம்பெண்
கரூர், எலவனூர் கதர்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 27). இவருக்கும், கோவை செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த கிருத்திகா (25) என்பவருக்கும் கடந்த 2020-ல் திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பிறகு செல்வக்குமார் அறந்தாங்கியில் தனது குடும்பத்துடன் தங்கி, நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கிருத்திகா தாய் வீட்டிற்கு நகை, பணத்துடன் சென்றுவிட்டார். மனைவியை தேடி சென்று விசாரிக்கையில் அவர் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து செல்வகுமாரை திருமணம் செய்தது தெரியவந்தது. தான் ஏம்மற்ற பட்டதை அறிந்த செல்வகுமார் இதையடுத்து கிருத்திகாவிற்கு திருமணத்தின்போது செல்வக்குமார் கொடுத்த தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை கேட்டபோது, தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளிப்பேன் என்று கிருத்திகா மிரட்டி உள்ளார்.

மேலும் செல்வக்குமாரிடம் பணம் பறிக்கும் நோக்கில் கிருத்திகா பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு கொடுத்த நிலையில், செல்வகுமார் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என்ற புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருத்திகாவை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி