மதுவினால் வந்த வினை. தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்.

54பார்த்தது
மதுவினால் வந்த வினை. மனநலம் பாதிக்கப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, கொம்பாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 35. இவரது மனைவி அமுதா வயது 34.

சுரேஷுக்கு சமீப காலமாகவே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும், அவருக்கு மது பழக்கமும் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டு வந்தது.

இதனால் விரக்தி அடைந்த மனநிலையோடு வாழ்ந்து வந்த சுரேஷ், ஏப்ரல் 25ஆம் தேதி அதிகாலை 5: 30- மணி அளவில் கொம்பாடி பட்டியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அமுதா, இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சுரேஷின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி