ஆஸ்பெடாஸ்சீட் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

59பார்த்தது
ஆஸ்பெடாஸ் சீட்டை பொருத்தும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

கரூர் ராமானுர் அருணாச்சலம் நகர் 5வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன் வயது 31.

இவர் ஆஸ்பெடாஸ் சீட் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் ஜூன் 19-ம் தேதி கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, பலமாபுரம் அருகே உள்ள நொச்சிப்பாளையம் பகுதியில் செயல்படும், லட்சுமி நாராயணா
காட்போர்டு கம்பெனியில் ஆஸ்பெடாஸ் சீட் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஆஸ்பெடாஸ் சீட் அப்பகுதியில் கடந்த செல்லும் மின் கம்பியில் பட்டுவிட்டது.

இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த மணிகண்டன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் சகோதரர் பூபதி அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மணிகண்டனின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி