டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. படுகாயம்.

56பார்த்தது
சின்னவரபட்டி அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து முதியவர் படுகாயம்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா லிங்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள சின்னவரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 60.

இவர் பிப்ரவரி 25ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் முருகன் நகரில் இருந்து
பூவாதேவம் சாலையில் டூவீலரில் சென்றார்


இவரது வாகனம் சின்னவரப்பட்டி பகுதியில் உள்ள பூஞ்சோலை அருகே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் ஆறுமுகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆறுமுகத்தின் மனைவி ருக்மணி அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி