பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் சாமன் மாதத்தில் இறைச்சி உண்கிறார்கள் என பேசியதற்கு சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடாவெட்டை தடை செய்வார்கள் என எதிர்வினையாற்றியிருந்தார். இன்று அதற்கு மேலும் பதிலடி கொடுக்கும் விதமாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள பட்டவையா அய்யனார் கோவிலில் நடக்கும் கிடாவெட்டு பூஜை பேனர் முன்பு கார்த்தி சிதம்பரம் புகைப்படம் எடுத்துள்ளது வைரலாகி வருகிறது.