போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

1057பார்த்தது
போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
ஆண்டார்குளம் அருகே அழகனாபுரத்தை சேர்ந்தவர் சுயம்பு. கொத்தனாரான இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுடைய மகள் கிரிஜா (வயது 19) நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி. ஏ. 2 -ம் ஆண்டு படித்து வருகிறார். ஆரல்வாய்மொழி கணேசபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் மகன் அருள்மதன் (26). இவர் ஐ. டி. ஐ. முடித்து விட்டு நாகர்கோவிலில் ஒரு அலுமினிய கேட் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய பெரியம்மா வீடு - அழகனாபுரம் அருகே கோட்டவிளையில் உள்ளது. அங்கு சென்று வந்த போது அருள் மதனுக்கும், கிரிஜாவுக்கும் காதல் மலர்ந்தது. 2 வருடமாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு கிரிஜாவின் பெற்றோர். எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி முப்பந்தல். இசக்கியம்மன் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கிரிஜா காதலனுடன் ஆரல்வாய்மொழி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த கிரிஜாவின் வளர்ப்பு தாய் வள்ளியம்மாள், கண்ணீருடன் கெஞ்சி அழைத்தார். ஆனால் அவரோ செவிசாய்க்கவில்லை. மாறாக காதலனுடன் செல்வதிலேயே உறுதியுடன் இருந்தார். இதனை தொடர்ந்து போலீசார் காதல் ஜோடியை சேர்த்து வைத்து அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி