தீபத்தை இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

70பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியை சேர்ந்தவர் விஜய் இவர் மார்த்தாண்டம் சிஎஸ்ஐ மருத்துவ மனை அருகே செந்தில் ஆண்டவர் என்ற பெயரில் மின்சாரத்தால் இங்கும் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். ஊழியர்கள் நிறுவனத்தில் வழக்கம் போல வேலைகளை செய்து கொண்டு இருந்தனர் அப்போது கடையில் இருந்து கரும் புகை வந்து கொண்டருந்ததை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர் அப்போது தீ மளமளவென பரவியதால் வெளியே ஓடி குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயர்ச்சியில் ஈடுபட்டனர் ஆனால் அதற்குள் நிறுவனத்திற்குள் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது , தக்க சமயத்தில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் தொடர்ச்சியாக மற்ற கடைகளுக்கு தீ பரவுவது கட்டுபடுத்த பட்டது இது குறித்த மார்தாண்டம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி